Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் ஏலக்காய் பயிரிடும் விவசாயிகளுக்கு பைல்ஸ் போர்டு இந்தியா சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஈரோடு பைல்ஸ் போர்டு இந்தியா உதவி இயக்குனர் கனக திலீபன், உதவி அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
கொல்லிமலை பகுதியில் ஏலக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஏலக்காயின் தரத்தை உயர்த்துவது குறித்தும், குறுகிய காலத்தில் ஏலக்காய் அதிகளவில் பயிர் செய்யப்பட்டு, அதனை நல்ல முறையில் நோய் இல்லாமல் வளர்த்து வருதால் மற்றும் அதிக அளவில் லாபம் அடைய மகசூலை அதிகப்படுத்த நிறுவனத்தின் அதிகாரிகளின் ஆலோசனைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
மேலும் நோய் தாக்கம் ஏற்பட்டால் உடனடியாக அதற்கு ஏற்ப மாற்று நடவடிக்கைகளை நிறுவனத்தின் மூலம் அறிந்து கொண்டு விவசாயிகள் அதனை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் தின்னனூர் நாடு பஞ்., தலைவர் ஜெகதீசன், வாழவந்தி நாடு பஞ்., முன்னாள் தலைவர் சந்திரன், நறுமண பொருட்கள் பயிரிடும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.